கபாலீஸ்வரர் கோவில் வேலைவாய்ப்பு:
கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், இளநிலை உதவியாளர், தமிழ் புலவர், தவில், பிளம்பர், வேத பாராயணம், உதவி பரிச்சாரகர் ஆகிய பணிகளுக்கென உள்ள 7 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கூறியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதனாது 01/07/2022 தேதியின் படி குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 45 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு, BA, MA, B.Lit, M.Lit ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் முன்அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கென தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.58,600/- வரை அளிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கோவில் நிர்வாக பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 23/03/2023 தேதிக்குள் தகுந்த ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.