மத்திய ரிசர்வ் போலீஸ் படையானது (CRPF) தற்போது Assistant Sub-Inspector மற்றும் Head Constable பதவிக்கான காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 27 அன்று வெளியிட்டது. CRPF-ல் தற்போது 1458 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு தகுதியான நபர்களால் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
CRPF-ல் காலியாக உள்ள 1458 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதன் மூலம் Assistant Sub-Inspector மற்றும் Head Constable போன்ற பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் தகுந்த பணியாளர்களை கொண்டு நிரப்ப பட உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 25.01.2023 அன்றைய தேதியின் படி 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பிக்கும் நபர்கள் 26.01.1998 முன் மற்றும் 25.01.2005 பின் பிறந்திருக்க கூடாது. இந்நிலையில் SC/ST/ OBC, Ex Servicemen போன்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய மற்றும் மாநில அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களின் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான அளவிலான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்வாகும் Assistant Sub-Inspector பதவிக்கு குறைந்தபட்சமாக ரூ.29,200 முதல் அதிகபட்சமாக ரூ.92,300 வரையிலான ஊதியமும், Head Constable பதவிக்கு குறைந்தபட்சமாக ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.81,100 வரையிலான ஊதியமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் திறன் அடிப்படையிலான தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்களுக்காக மத்திய அரசு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. அதன்படி, கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக 31.01.2023 தேதிக்குள் தாமதிக்காமல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.