அண்ணா பல்கலைக்கழகம் தற்போது, பியூன் பணிக்கென ஒரு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு:
அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், பியூன் பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01/01/2023 என்ற தேதியின் படி 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பியூன் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.424 /- ஊதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு தகுதியுள்ள நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு தகுந்த சான்றிதழ்களுடன் 13.02.2023 தேதிக்குள் தபால் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.